பதார்த்த குண சிந்தாமணி
स्वास्थ्य और फ़िटनेस | 2.3MB
அற்புத சிந்தாமணி யென்னும் பதார்த்தகுண சிந்தாமணி மூலமும் உரையும் - ஆசிரியர் திருநெல்வேலி காசீம் முகையதீன் ராவுத்தர். இந்நூல் இருபதாம் நூற்றாண்டில் இருமுறை பதிக்கப்பட்டது. தற்சமயம் இது அனைவரும் பயன்பெறும்படி பீடிஎஃப் படிவத்தில் டிஜிட்டல் லைப்பிரரி ஆஃப் இந்தியாவின் இணையதளத்தில் உள்ளது.
இதில் மருத்துவத்துக்கு தேவையான அனைத்து மூலிகைகளின் குணங்களும், அவற்றின்,
வேர், பூ, காய், பழம் (சமூலம்) குணங்களும், வீட்டில் சமையலறையில் உள்ள மசாலா பண்டங்களும், கடைச் சரக்குகள், நீர், பால், தயிர், மோர், நெய் ஆகியவற்றின் குணங்களும் அனைவரும் புரிந்து கொள்ளும் எளிய நடையில் உரையாக உள்ளது.
இதுவன்றி, தினசரி கடன்களைச் செய்வதற்கு உதவியாக, அவைகளின் நியமங்கள், எப்படி, எவ்வாறு செய்வது, ஏன் செய்ய வேண்டும் ஆகியவைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
ஆசிரியர் உரையில் கூறியது போல், இந்நூலைப் பின்பற்றி வாழ்க்கையை நடத்தினால், அனைவரும் நோயின்றி ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும்.
சிறு பிழை நீக்கம்